வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

சுற்றுப்புறசூழல் பொன்மொழிகள்


சுற்றுப்புறசூழல் பொன்மொழிகள்

*******************************

வனவளம் காத்து கனிம வளம் பெருக்குவோம்!

வானுயர்ந்த மேகங்கள் வா வென்று அழைத்தால்தான் சூல் கொண்ட மேகங்கள் சுற்றி நின்று மழை பொழியும்!

வீட்டை சுற்றி நாம் நட்டு வைத்த மரம் ;சுற்றி வரும் தூசிகளை தடுத்திடுமே நிதம்!

மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, மண் அரிப்பு குறைந்து விடும்!

மரங்கள் இல்லாத பூமி! மனிதன் வாழ முடியாது சாமி!

இயற்கை மரங்களின் வழியாகத்தான் சுவாசிக்கிறது! மரங்கள் அழிந்திட இயற்கை அழிந்திடும்!

காற்றில் நஞ்சை கலக்காதே! கால தேவனை அழைக்காதே!

வனங்கள் ஒரு பூமியின் நெற்றி திலகம்! பூமியை விதவையாக்காதீர்!

பசுமை பூமியை விட்டு வெளியேறும் போது பஞ்சம் அங்கே மெல்ல நுழைகிறது!

வாருங்கள் ஓசோன் ஓட்டையை வானுயர்ந்த மரங்களால் அடைத்திடுவோம்!

பெற்ற அன்னை ஊட்டுவது பாசம்! இயற்கை அன்னை ஊட்டுவது சுவாசம்!

விண்ணோக்கி மரம் உயர்ந்து நிற்க ,மண் நோக்கி மழை பொழிவு உயரும்!

நல்ல மரங்களை கொன்றுதான் மோசமான செய்தி தாள்கள் வருகின்றன!

நாம் அனைவரும் சேர்ந்து சாகத்தொடங்கியிருக்கும் பூமிக்கு மரங்களால் உயிர்கொடுப்போம்!

மரங்களை அரவணைத்து நில்!அவைகள் நம்மை காப்பாற்றும்!

நமது பூமியை நாமே காப்போம்!

குழாய் நீர் கசிவை உடனே நிறுத்து! இல்லை எனில் ஆண்டுக்கு இருபதாயிரம் லிட்டர் தண்ணீர் விரயமாகும் !

காகிதத்தை சேமித்து காடுகளை காப்போம்!

பூமி தன்மேல் நிற்க உன்னை அனுமதிக்கிறது! நீ அது தன் நிலையிலிருந்து மாற அனுமதிக்காதே!

கடலும் வானும் நீலமாகவும்,பூமி பசுமையாகவும் இருக்கட்டும்!

இழை பல்புகளை தவிர்த்து குழல் விளக்குகளை பயன்படுத்தி மின் செலவை குறை!

இன்று நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக், வரும் ஆயிரம் ஆண்டிற்கு துன்பம் தரும்!

மரங்களால் நீர்வளம் பெருகும்,நீர்வளம் பெருகினால் எல்லா வளங்களும் பெருகும்.

புவி வெப்பம் உயர ,கடல்மட்டம் உயரும்! கடல்நீர் உயர கடற்கரை நகரங்கள் நீரில் முழுகும்!

கருத்துகள் இல்லை: