சனி, 26 பிப்ரவரி, 2011

குறள் சிந்தனை!

குறள் சிந்தனை!

மூன்று தமிழ் அறிஞர்கள் சொல்லும் குரளுரைக்கு இது போட்டி இல்லை .என்
மனதில் தோன்றிய வித்தியாசமான சிந்தனை.....


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
:குறள்
கலைஞர் உரை:

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி
நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

மு.வ உரை:

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி
நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

சாலமன் பாப்பையா உரை:

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால்
எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

எனது கருத்து :

எனக்கு அது வேண்டும் ! இது வேண்டும்! எவரிடமும் கை ஏந்தி நில்லாதவன்
இறைவன் .அந்த இறைவனின் திருவடியை சரணடைந்தால் எந்த துன்பமும் இல்லை!

கருத்துகள் இல்லை: