வியாழன், 22 ஏப்ரல், 2010
முடிவில்லா முற்று புள்ளி.
வணிகம் செய்ய இங்கே வந்தவன் ,
அரசியலுள் புகுந்தான் !-நம்மை ஆண்டான் !
நாற்பத்து ஏழில் அவனிடமிருந்து மீண்டோம்!
அடிமை தளைகள் அகன்றாலும் ,
இன -சாதி சமய தளைகள்
இன்னும் அகலவில்லை!
தீவிரவாத பேய்களும் தேடி நிதம் அலைகின்றன!
வாக்குகளுக்கு விலை கொடுத்து
அரசியலை வியாபாரமாக்கி விட்டனர்
நம் அரசியல் வாதிகள்!
முகவரிகளை தொலைத்து விட்டு
முடிவில்லா முற்று புள்ளியானது ஜனநாயகம்!
சானியா மாலிக்
சானியா மாலிக் (கவிதை! )
என்ன தவறு செய்தது இந்த பெண் ?
அண்டை நாட்டு ஆடவனை மணந்தால்
இவர்களுக்கு ஏன் எரிச்சல் வருகிறது?
இருவரின் மனமும் ,மதமும் ஒன்றானபின்
இவர்கள் எதற்கு குறுக்கே?
ஊடகங்கள் சிலநாட்களாய் இவர்களை
சுற்றியே வந்ததும் ,
சுற்றி வந்து இவர்களை மென்றதும்
கொடுமையிலும் கொடுமை !
ஆடுகளத்தில் வெற்றிகளை கொணர்ந்து
நாட்டுக்கு அர்பணித்த அம்மங்கை
நாடுகடத்த பட வேண்டுமாம்! -எல்லை தாண்டிய
தீவிரவாத தீயினால் கருகிய -இரு நாட்டின்
அமைதியும், நட்பும்,
மாலிக் சானியாவை மணந்த பின்னே
மண்ணில் மறுபடியும் துளிர் விடாதா?
இன்னல் பல கடந்து -இல் வாழ்வில்
இணைந்திட்ட
வெற்றி மகள் சானியாவை
வாஞ்சையுடன் வாழ்த்திடுவோம்!
என்ன தவறு செய்தது இந்த பெண் ?
அண்டை நாட்டு ஆடவனை மணந்தால்
இவர்களுக்கு ஏன் எரிச்சல் வருகிறது?
இருவரின் மனமும் ,மதமும் ஒன்றானபின்
இவர்கள் எதற்கு குறுக்கே?
ஊடகங்கள் சிலநாட்களாய் இவர்களை
சுற்றியே வந்ததும் ,
சுற்றி வந்து இவர்களை மென்றதும்
கொடுமையிலும் கொடுமை !
ஆடுகளத்தில் வெற்றிகளை கொணர்ந்து
நாட்டுக்கு அர்பணித்த அம்மங்கை
நாடுகடத்த பட வேண்டுமாம்! -எல்லை தாண்டிய
தீவிரவாத தீயினால் கருகிய -இரு நாட்டின்
அமைதியும், நட்பும்,
மாலிக் சானியாவை மணந்த பின்னே
மண்ணில் மறுபடியும் துளிர் விடாதா?
இன்னல் பல கடந்து -இல் வாழ்வில்
இணைந்திட்ட
வெற்றி மகள் சானியாவை
வாஞ்சையுடன் வாழ்த்திடுவோம்!
அரியலூர் மாரி .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)