வியாழன், 22 ஏப்ரல், 2010

முடிவில்லா முற்று புள்ளி.


வணிகம் செய்ய இங்கே வந்தவன் ,
அரசியலுள் புகுந்தான் !-நம்மை ஆண்டான் !
நாற்பத்து ஏழில் அவனிடமிருந்து மீண்டோம்!
அடிமை தளைகள் அகன்றாலும் ,
இன -சாதி சமய தளைகள்
இன்னும் அகலவில்லை!
தீவிரவாத பேய்களும் தேடி நிதம் அலைகின்றன!
வாக்குகளுக்கு விலை கொடுத்து
அரசியலை வியாபாரமாக்கி விட்டனர்
நம் அரசியல் வாதிகள்!
முகவரிகளை தொலைத்து விட்டு
முடிவில்லா முற்று புள்ளியானது ஜனநாயகம்!

நட்பு ஹைகூ !

ஓன்று.. இரண்டு.. மூன்று. எண்ணிபார்த்தேன்!கம்பிகள் இல்லை -நட்புச்சிறை

நட்பு ஹைகூ !

துன்பம் துளைத்த இதயத்திற்கு ஆறுதல் தரும் அருமருந்து நட்பு!

நட்பு ஹைகூ !

இரு இதயங்கள் மௌனமாய் பேசிட
இழைந்து வரும் சங்கீதம் நட்பு

சானியா மாலிக்

சானியா மாலிக் (கவிதை! )

என்ன தவறு செய்தது இந்த பெண் ?
அண்டை நாட்டு ஆடவனை மணந்தால்
இவர்களுக்கு ஏன் எரிச்சல் வருகிறது?
இருவரின் மனமும் ,மதமும் ஒன்றானபின்
இவர்கள் எதற்கு குறுக்கே?
ஊடகங்கள் சிலநாட்களாய் இவர்களை
சுற்றியே வந்ததும் ,
சுற்றி வந்து இவர்களை மென்றதும்
கொடுமையிலும் கொடுமை !
ஆடுகளத்தில் வெற்றிகளை கொணர்ந்து
நாட்டுக்கு அர்பணித்த அம்மங்கை
நாடுகடத்த பட வேண்டுமாம்! -எல்லை தாண்டிய
தீவிரவாத தீயினால் கருகிய -இரு நாட்டின்
அமைதியும், நட்பும்,
மாலிக் சானியாவை மணந்த பின்னே
மண்ணில் மறுபடியும் துளிர் விடாதா?
இன்னல் பல கடந்து -இல் வாழ்வில்
இணைந்திட்ட
வெற்றி மகள் சானியாவை
வாஞ்சையுடன் வாழ்த்திடுவோம்!


அரியலூர் மாரி .