ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

கவியரசே! நீ வாழ்க!


கண்ணதாசன் !

இந்தப்பெயரை ஒலிக்கும்

உதடுகளே

கவிதைகள் ஆகிவிடும்.

கொஞ்ச நாட்களே ஆண்டாலும்
உனது கவி ஆளுமையால்
திரையுலகம் நிமிர்ந்து நின்றது !

உனது வரிகளை உச்சரித்து
பாடகர்கள் உயர்ந்து நின்றார்கள்!

மெட்டமைத்த இசைவாணர்
தொட்டு நின்றார் சிகரங்களை !

சிற்றின்பவாசல்களை தேடி ,பிறகு
ஆன்மிக உலகில் அமர்ந்து விட்ட கவியரசன் நீ!
க‌விதையின்

காட்டாறுக‌ளையெல்லாம்

த‌ட‌ம்புர‌ட்டிக்கொண்டு வ‌ந்து

அழ‌கு காதல் உண‌ர்ச்சி எனும்

தேனாறுக‌ளையெல்லாம்

குடித்து தீர்த்துவிட்டு

காலிக்கிண்ண‌த்தை

அதாவ‌து இந்த‌ உல‌க‌த்தை

வீசியெறிந்து விட்டுப்

போய்விட்டாய் !

அந்த‌க் கிண்ண‌த்தை மொய்த்த‌

எறும்புக்கூட்ட‌ங்க‌ளே

இன்று வ‌ரை

க‌விஞ‌ர்க‌ள் என்று

ஊர்ந்து கொண்டிருக்கின்ற‌ன‌.

கருத்துகள் இல்லை: